மணற் கொள்ளை.. காவலர் கொலை... கருத்து தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன் மீது ஜெ. வழக்கு

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் வேலூர் மாவட்ட எல்லை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகள் சேரும் பகுதியான புரிசை அருகே ஆற்றில் சிலர் அனுமதியின்றி மணல் எடுப்பதாக தக்கோலம் காவல்நிலைய போலீஸாருக்கு கடந்த சனிக்கிழமை தொலைபேசி வந்துள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி உத்தரவின்பேரில் எஸ்.ஐ. ராஜன், தலைமை காவலர் கனகராஜ் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது சுமார் ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள், ஒரு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டனர். ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் சைக்கிளை இருவரும் நிறுத்திவிட்டு ஆற்றினுள் இறங்கியதை பார்த்த அங்கிருந்தோர் மணல் அள்ளும் உபகரணங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டனராம். இந்நிலையில் வண்டியை கிளப்ப அதனுருகே ஒடிய டிரைவரை கனகராஜ் ஓடிச்சென்று பிடித்தாராம். அப்போது திடீரென டிராக்டரை டிரைவர் கிளப்பியதை அடுத்து டிராக்டர் சக்கரத்தில் கனகராஜ் சிக்கி அலறி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் அதே வேகத்தில் டிராக்டரை கிளப்பிக்கொண்டு வேகமாக சென்று விட்டாராம்.
இச்சம்பவத்தில் ராஜன் கிட்டே வருவதற்குள் கனகராஜ் அலறிதுடிக்க ராஜன், அங்கிருந்தோரை கூக்குரலிட்டு அழைத்து அவர்களுடன் சேர்ந்து கனகராஜை கரைக்கு தூக்கி வந்துள்ளனர். கரைக்கு தூக்கி வந்தநிலையிலேயே கனகராஜ் இறந்து விட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலும் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், காவலர் கனகராஜ் பலியான சம்பவம் குறித்து அவதூறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அவரது அறிக்கை முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications