தீபாவளி் மது விற்பனை 10 கோடி... இது நெல்லையில் மட்டும்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக் மூலம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பண்டிகைக் காலங்களில் துணி எடுக்கக் குவியும் கூட்டத்தைப் போல மதுக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை குடிமக்கள் நன்றாக குடித்தும், பட்டாசுகளை வெடித்தும் கலகலப்பாக கொண்டாடியுள்ளனர்.

அதிகரிக்கும் மது விற்பனை
பண்டிகை காலங்களில் போது டாஸ்மாக் மூலம் மது விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

நெல்லையில் 228 மதுக் கடைகள்
நெல்லை மாவட்டத்தில் 228 மது கடைகள் உள்ளன. இவற்றில் கூடங்குளம், கோபாலசமுத்திரம் ஆகிய கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை.

வழக்கம் போல இந்தாண்டும்.. சியர்ஸ்
வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவளி பண்டிகையின் போது நெல்லை மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்தது. அனைத்து மது கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை இரட்டிப்பு குடி...
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மது விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது.

பிராந்தி, விஸ்கிக்குத்தான் கிராக்கி
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி அன்று பிராந்தி, விஸ்கி வகைகள் ரூ.3 கோடியே 99 லட்சத்து 66 ஆயிரத்து 500க்கும், பீர் வகைகள் ரூ.56,61,900க்கும், விற்றுள்ளன. மொத்தம் ரூ.4 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரத்து 400க்கு விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டை விட ரூ. 71.17 லட்சம் அதிகம்
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.3 கோடியே 85 லட்சத்து 10 ஆயிரத்து 500க்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.71 லட்சத்து 17 ஆயிரத்து 900 அதிகமாக விற்றுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் அமோக விற்பனை
தீபாவளிக்கு முந்திய நாள் விஸ்கி, பிராந்தி வகைகள் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தி்ற்கும், பீர் வகைகள் ரூ.20 லட்சத்து 49 ஆயிரத்து 300க்கும் விற்றுள்ளன. மொத்தம் ரூ.3 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 300க்கு விற்றுள்ளது.

ஆக மொத்தம் ரூ. 10 கோடிக்கு விற்பனை
கடந்த ஆண்டை விட ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு விற்றது. 3 நாட்களும் சேர்ந்து மொத்தம் ரூ.10 கோடிக்கு மது பானங்கள் விற்பனை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications