உச்சகட்ட பரபரப்பு.. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
Recommended Video

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் முதலில் புதுச்சேரியிலும், பிறகு கர்நாடக மாநிலம் குடகிலுள்ள ரிசார்ட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இல்லாமல் செயல்பட்டுவருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

2 முறை மனு
திமுக சார்பில் ஏற்கனவே 2 முறை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் திமுக கோரிக்கை முன் வைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் ஆளுநரை சந்தித்து இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்தன.

திமுக வழக்கு
ஆனாலும், ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன் கோபம்
எடப்பாடி பழனிச்சாமி அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தினகரன் மேலும் கோபமடைந்துள்ளார்.

நெருக்கடி
தினகரன் இன்று அளித்த பேட்டியிலும், ஆட்சியை கலைக்க தயாராகிவிட்டதாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடுமாறு ஹைகோர்ட்டை திமுக அணுகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கலைந்தால் தேர்தலை சந்திக்க திமுக தயாராகிவருகிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெளிவாகிறது. அதற்கான நெருக்கடிகளை திமுக சட்டரீதியாக கொடுக்க ஆரம்பித்துள்ளது.
-
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications