கருத்து சுதந்திரத்தை பறித்தால் ஆலோசனை கேட்கலாம்... வக்கில்கள் குழுவை அமைத்தது திமுக
சமூக வலைதள கருத்துக்களுக்காக போலீஸ் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் உதவி கேட்க வக்கீகல்கள் குழுவை திமுக அமைத்துள்ளது.
சென்னை: சமூக வலைதள கருத்துக்களுக்காக போலீஸ் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் உதவி கேட்க வக்கீகல்கள் குழுவை திமுக அமைத்துள்ளது. கருத்து சுதந்திரத்தை போலீஸ் பறித்தால் மக்கள் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரபரப்படுவதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் அண்மையில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சட்ட ஆலோசனை பெற திமுக வக்கீல்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது.

காவல்துறையால் பாதிக்கப்பட்டோர் திமுக வழக்கறிஞர்களிடம் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, குமரேசன், ஷாஜகான், பாபுமுத்துமீரான் மற்றும் சரவணன் ஆகிய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications