மக்கள் நலன் மீது அக்கறையற்றவர் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் - துரைமுருகன் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் நலன்கள் மீது அக்கறையற்றவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நீட் தேர்வு மசோதா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி துரைமுருகன் பேசினார். இதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

இதனை கண்டித்தும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உரையை புறக்கணித்தும் அமைச்சர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் குறித்து பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்கியதால் வெளிநடப்பில் ஈடுப்பட்டதாக சட்டசபை வளாகத்தில் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கூறினார்.

மக்கள் மீது அக்கறையற்றவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மக்களை பாதிக்கும் போதை வஸ்துகளை விற்ற பணத்தை பங்கு போட்டுக்கொண்டவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதை பற்றி சட்டசபையில் பேசினோம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றும் துரைமுருகன் கூறினார்.
நீட் தேர்வு மசோதாவை குடியரசுத்தலைவர் பார்வைக்கே அனுப்பவில்லை என்றும் துரைமுருகன் குற்றம் சாட்டினார். ஒரே நாளில் இன்று இரண்டு முறை திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications