அம்பேத்கரின் 127வது பிறந்த நாள்.. கோலாகல கொண்டாட்டம்.. முதல்வர், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை
சென்னை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதே போன்று கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மேதை அம்பேத்கரின் உருவ சிலைக்கு அண்மையில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற இந்திரா பானர்ஜி மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ்
சென்னை துறைமுகம் பகுதியில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஓபிஎஸ் டீம்
கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமானோர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.

தொடரும் மரியாதை
மேலும், சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் ஜெயக்குமார், சமத்துவ கட்சித்தலைவர் சரத்குமார், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications