ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி.. சென்னை உள்பட தமிழகம் முழுக்க அரசு பஸ்கள் நடுவழியில் நிறுத்தம்
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர்கள் திடீரென எதிர்ப்பு தெரிவிப்பதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை : அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போக்குவரத்து ஊழியர்கள் அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால் சென்னை கோயம்பேடு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஓட்டுனர்கள் பேருந்துகளை பாதியிலேயே நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அடிப்படை மற்றும் தர ஊதியத்துடன் சேர்ந்து 2.57 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என்பது போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை. இவற்றில் 2.40 சதவீதம் மட்டுமே தர முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இது தொடர்பாக அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் ஊழியர் சங்கத்தினரின் பேச்சுவார்த்தை நடந்தது. 2.57 சதவீத ஊதியம் உயர்வு தர அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் சுமார் 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மாலை நேரத்தில் திடீரென பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதே போன்று மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டையிலும் ஓட்டுனர்கள் திடீரென பேருந்துகளை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications