பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என சொன்னது ஜெயலலிதாதானே..... துரைமுருகன் பதிலடி
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொன்றபோது திமுக ஆட்சியில் இருந்தது என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசியதற்கு பதிலடியாக பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர் முதல்வர் ஜெயலலிதாதான் என்று திமுகவின் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2-வது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ., வெற்றிவேல் பிரபாகரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தது திமுகதான் என சாடிப் பேசினார்.

வெற்றிவேல் பேச்சால் அமளி
வெற்றிவேல் பேச்சுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதிமுக- திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கைநீட்டிப் பேச பரபரப்பு ஏற்பட்டது.

சபாநாயகர் எச்சரிக்கை
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர்கள் அவை மரபுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாமல் கூச்சலிட்டு கூட்ட நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றார்.

துரைமுருகன் சவால்
பின்னர் பதிலளித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், பிரபாகரனை கொன்றபோது திமுகதான் ஆட்சியில் இருந்தது என்று வெற்றிவேல் கூறினார். ஆனால் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறியவர் முதல்வர் ஜெயலலிதா. இலங்கை தமிழர் விவகாரம்குறித்து முழுமையாய விவாதிக்க திமுக தயார்.... அதிமுக தயாராக உள்ளதா? என்று சவால் விடுத்தார்.

ஓபிஎஸ் பதில்
இதையடுத்து பேசிய நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணவும், சம உரிமை பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்ன மாதிரியான நடவடிக்கை என்பது குறித்து விளக்கமாக ஆளூநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications