நாடாளுமன்ற தேர்தல்: ரேஷன் பொருட்கள், பேருந்துகளில் ஜெ., படம் போட தடை

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை வாக்காளர்களுக்கு வலியுறுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக தகுதி உள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதுடன், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களை ஓட்டு போட வைப்பது, ஓட்டு போட வருபவர்கள் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தடுப்பது ஆகிய 3 பணிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தவறான கலாசாரத்தை கொண்டு வருவதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும். குறிப்பாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதிகளிலேயே ஓட்டு போட உரிமை உள்ளது. இதனை கல்லூரி நிர்வாகங்கள் அதனை மாணவர்கள் மத்தியில் எடுத்து சென்று ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.
வாக்காளர் தினம்
மேலும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அட்டைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படங்கள் இருப்பதை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்றார்.
மாணவர்களிடம் விழிப்புணர்வு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், கூறியதாவது:-
அரசு உயர் அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்பதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒவ்வொரு துறையும் இந்த கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தப்பட்டது. இதனை கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்,) மாணவர்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவும் வாக்காளர் தினமான வரும் 25ம்தேதி முதல் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஓட்டுக்கு காசு
வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வருவதுடன், எந்தவித அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல், சுயசிந்தனையுடன், தைரியமாக சென்று வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் எந்தகாரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வாக்கை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் சிறை தண்டனை என்பதையும் வலியுறுத்த உள்ளோம். வாக்களிக்க விரும்பவில்லை என்றால், எப்படி வாக்குபதிவு எந்திரத்தில் பதிவு செய்வது என்பதையும் தெரிவிக்க உள்ளோம் என்றார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications