சூனியமாகிறதா சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலம்? டெல்லியில் நாளை பரபர விசாரணை
இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலாவின் நியமனம் தொடர்பாக நாளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லுமா? என்பது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில்தான் சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலம் தெரியவரும்.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியது. இதற்கு சசிகலா அணி எதிர்ப்பு தெரிவித்தது.

இரு கட்சிகளாக உடைந்தன
இதையடுத்து அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) ஆகிய இரு கட்சிகளுக்கு அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம்.

8 வார அவகாசம்
இதனிடையே நாளை இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கபட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையை ஒத்தி வைக்கும் நோக்கத்தில் சசிகலா கோஷ்டி 8 வார கால அவகாசம் கேட்டிருக்கிறது.

சசி குடும்பம் ஒதுக்கி வைப்பு?
தற்போது அதிமுக இரண்டு அணிகளும் ஒன்றாக இணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய விசாரணை
அதிமுகவில் அடுத்து என்ன புயல்... எந்த தியான வடிவத்தில் வெடிக்கும் என தெரியாத நிலை உள்ளது. இச்சூழ்நிலையில் டெல்லியில் நாளை நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் விசாரணை சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கலாம் என்றே தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications