மதுரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தடபுடல் வரவேற்பு.. கூட்டம் தான் கொஞ்சம் குறைவு!
மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை.
மதுரை: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டு வருகிறார். மதுரையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1.30 மணிக்கு மதுரை வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றது போலவே, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் ப்ளக்ஸ் பேனர்கள், தோரணங்கள் என வரவேற்பு எல்லாம் தடபுடலாக இருந்தது.
முதல்வர் வருகையொட்டி மதுரை ரிங் ரோட்டில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை இணைத்து 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் இளைஞர் பெருவிழா நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் ஆள் சேர்ப்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் விதத்தில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நடத்துவதாகவும், மாணவர்கள் அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு 500 ரூபாய் மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகித்து அரசு பஸ்களை இலவசமாக இயக்கியதாகவும் கூறப்படுகிறது. என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை. மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருவதால் தொண்டர்களே பெரும்பாலனோர் வரவில்லை. எப்படியே விழா ஒரு வகையில் நடந்து முடிந்தது.
அதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் மாலையில் மேம்பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு எந்த அளவுக்கு கூட்டத்தை காட்டப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications