விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்ய வேண்டும்.. கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்த மூதாட்டி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த ஒரு மூதாட்டி, அங்கு திடீரென பட்டாசு வெடித்ததால் பரபரப்பானது. அவரிடம் அங்கிருந்த போலீஸார் விசாரித்தபோது, ஈழத்தைச் சேர்ந்த அகதிப் பாட்டி, வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்பதை கொண்டாடுவதற்காக வெடி வெடித்ததாக கூறினார்.
அந்தப் பாட்டியின் பெயர் காசியம்மாள். 75 வயதாகும் அவர் துணிப் பையுடன் ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். பின்னர் கையில் இந்திய தேசியக் கொடியை பிடித்தபடி அங்கு பட்டாசை வெடித்தார். பின்னர் இந்தியா வாழ்க.. இலங்கையில் தமிழினம் வாழ்க என்று கோஷமிட்டார்.
தொடர்ந்து சீனிச் சர வெடியை எடுத்து வெடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் உள்ளிட்டவர்கள் பாட்டியை நெருங்கி என்னாச்சுத்தா, எதுக்கு இந்த வெடி...என்று கேட்டபோது, நான் ஈழத்து பெண். என் பேரு காசியம்மாள். அகதியாக இந்தியா வந்தேன் என்னை தோப்புக் கொல்லை முகாமில் தங்க வைத்தார்கள்.
என்னைப் போலவே என் தமிழின மக்கள் அகதிகளாக இங்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் எங்கும் போகிறார்கள். இன்று அவர்களை ஆள தமிழன் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். அந்த விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும். எம் மக்களுக்கு தனி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இனியும் எம் மக்கள் எங்களைப் போல அகதிகளாக செல்லக் கூடாது.
அதற்காகத் தான் பதவி ஏற்பு நாளில் பட்டாசு வெடித்து இந்திய தேசிய கொடியுடன் வந்தேன். இந்தியா எம் மக்கள் வாழ உதவ வேண்டும். அதற்காகத் தான் இந்திய தேசிய கொடியை உயர்த்தினேன் என்றார் காசியம்மாள்.
அவரது பதிலில் தெரிந்தது...முதுமையிலும் தளராத இளமையுடன் கூடிய இன உணர்வுதான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications