கரூரில் ரயிலில் செல்லும் போது நெஞ்சுவலி: மூதாட்டி பரிதாப பலி
கரூர்: விருதுநகரில் இருந்து மைசூருக்கு செல்லும் ரயிலில் சென்ற மூதாட்டி நெஞ்சுவலி காரணமாக பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உரிய மருத்துவ வசதி இல்லை என்று கூறி பயணிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்த சவுண்டையா என்பவரது மனைவி ராஜலட்சுமி(68). அவர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விருதுநகரில் இருந்து மைசூருக்கு புறப்பட்டார்.
இந்த ரயில் திண்டுக்கல் தாண்டியதும் ராஜலட்சுமிக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையம் மூலம் கரூர் ரயில் நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது கடும் நெஞ்சுவலியால் ராஜலட்சுமி துடித்தார். ஆனால் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அவர் கரூர் ரயில் நிலையத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள் ராஜலட்சுமிக்கு உரிய சிக்சை அளிக்க கரூர் ரயில் நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கரூர் ரயில் நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ராஜலட்சுமி பலியாக காரணமாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பிறகு ராஜலட்சுமியின் உடல் விருதுநகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications