அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தள தேர்தல் பிரச்சாரங்கள் கண்காணிக்கப்படும்: ராஜேஷ் லக்கானி
கோவை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தள தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
கோவையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதன்படி ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குசாவடி அமைப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு என்று தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தமிழகத்தில் 20 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
கடந்த தேர்தலில் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் விவரம், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தலில் செலவு கணக்கு காட்டாதவர்கள் மீது தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களின் வழியாக மேற்கொள்ளும் பிரச்சாரங்களும் கண்காணிக்கப்படும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications