தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி: அல்லாடும் மாற்றுத்திறனாளிகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவுக்காக 2 ஆயிரத்து 931 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தேர்தல் பணியாற்ற 14 ஆயிரத்து 643 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 267 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் முதல் கட்ட பயிற்சி இன்று தொடங்குகிறது. இதற்கான ஆணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் தேர்தல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலநீலிதநல்லூர் யூனியன், குலசேகரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியை உஷா சங்கரன்கோவில் தொகுதியில் இருந்தும், தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜான்சன் நாங்குநேரி தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் என தெரிந்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பணியை வேறு
ஆசிரியர்களுக்கு மாற்றி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதே போன்று பெண்கள், நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பலரும் தங்களது பணியை வேறு நபர்களுக்கு மாற்றி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனால் தேர்தல் பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பலர் புலம்பி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications