பஞ்சாயத்து களங்கள்... அதிமுகவுக்கு ஜெ. சமாதி; காங்கிரஸுக்கு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம்!
மாவட்ட தலைவர்கள் நியமனங்களுக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸார் அறிவித்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் பிரச்சனை என்ற உடனேயே ஜெயலலிதா சமாதிக்குப் போகும் பாணியை பின்பற்றி காங்கிரஸ் கட்சியினர் இப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே அவருக்கு எதிரான கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் திருநாவுக்கரசருக்குமான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்த்தன திவேதி அறிவித்திருந்தார். காங்கிரஸில் மேலும் 11 மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.

இளங்கோவன் ஆதரவாளர்கள் டிஸ்மிஸ்
இதில் ஏராளமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். திருநாவுக்கரசர் ஆதரவாளர்களே பெரும்பாலானோர் நியமிக்கப்பட்டனர்.

போராட்ட அறிவிப்பு
இந்த நியமனங்களுக்கு வழக்கம் போல கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இப்புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் இன்று போராட்டம் நடத்தப் போவதாக இளங்கோவன் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

திருநாவுக்கரசர் எச்சரிக்கை
இப்போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார். அதிமுகவில்தான் பிரச்சனை என்ற உடனேயே ஜெயலலிதா சமாதிக்கு போய் தியானம் செய்வது வழக்கமாக உள்ளது.

பஞ்சாயத்து களங்கள்
இப்போது அதிமுகவினரை பின்பற்றி காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தை நோக்கி படையெடுக்கின்றனர். தலைவர்கள் நினைவிடங்கள் தமிழகத்தில் பஞ்சாயத்து களங்களாக உருமாறி வருகின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications