ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்த என்ஜீனியர் கைது
நெல்லை: நெல்லை அருகே ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்ற என்ஜீனியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். காக்கி பேண்ட், டி சார்ட் அணிந்திருந்த அவர் நிதி நிறுவன உரி்மையாளரிடம் தான் ஐபிஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராதாபுரம் பகுதியில் உள்ள சில நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இங்கு பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த வந்துள்ளேன். உங்கள் நிறுவனத்தின் மீது மோசடி எதுவும் நடக்கவிலலை என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உரிமையாளர் ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தன்னை போலீசில் மாட்டி விட யூகித்த அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். மேலும் ராதாபுரம் காவல் நிலையத்துக்கு சென்று விட்டு மாலையில் வருகிறேன் என்று கூறி விட்டு வெளியில் செல்ல முயன்றார். அதற்குள் ராதாபுரம் இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் தன் பெயர் சந்திரபோஸ், தந்தை பெயர் கணபதி என்றும் சொந்த ஊர் தெற்கு கருங்குளம் என்றும் தெரிவித்தார். பிஇ படித்துள்ள இவர் வேலை கிடைக்காததால் இது போன்ற மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், படிக்கும் போதே போலீஸ் வேலையில் சேரப்போவதாக கூறியுள்ளார். ஐபிஎஸ் தேர்வு எழுத போவதாக கூறிய அவர் மகராஷ்டிராவுக்கு சென்றுள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவர் ஐபிஎஸ் தேர்வு எழுதி பயிற்சி முடித்து விட்டதாக அனைவரிடமும் கூறியுள்ளார்.
அங்கிருந்து வரும்போதே போலீஸ் அதிகாரி போல் உடை, கூலிங்கிளாஸ் அணிந்து வந்து்ள்ளார். தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறிய அவர் தன்னை யாராவது எதிர்த்தால் சுட்டு கொன்று விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சந்திரபோஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது மீண்டும் மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications