என் மகன் சுபாஷ் உயிரோடு திரும்ப வருவான்... நம்பிக்கையோடு பேசும் தந்தை
சென்னை: என் மகன் உயிருடன்தான் இருப்பார், அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையிருக்கிறது என்று கடலில் விழுந்த டோர்னியர் விமானத்தில் சென்ற துணை விமானி சுபாஷின் தந்தை சுரேஷ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த ஜூன் 8ம்தேதி ஆபரேசன் ஆம்லாவிற்காக நாகப்பட்டினம் வரை ரோந்து சென்று விட்டு திரும்பிய டோர்னியர் விமானம் சிதம்பரம் அருகே மாயமானது. இந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகியோர் சென்றனர்.

மாயமான விமானம் சிதம்பரம் அருகே கடலில் விழுந்ததாக கூறப்பட்டதால் கடந்த ஒரு மாதகாலமாக ஹெலிகாப்டர்கள், அதிநவீன கப்பல்களைப் பயன்படுத்தி கடலுக்கு அடியில் ஸ்கேன் செய்து தேடி வந்தனர்.ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து விமானத்தில் பயணித்த விமானிகளின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். எனினும் மூவரும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையோடு கூறியதோடு, விமானத்தை கண்டுபிடிக்க கடிதம் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், பிச்சாவரத்துக்கு கிழக்கே கடலுக்கு அடியில் அந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமானத்தில் பயணித்த செய்த 3 பேரின் நிலை என்ன என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.
விமானம் கண்டு பிடிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய துணை விமானி சுபாஷின் தந்தை சுரேஷ், விமானம் மாயமாகி 32 நாட்களாக கடலோர காவல்படை தேடிய போது எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது விமானத்தின் பாகங்கள் கிடைத்து இருப்பதாக வரும் தகவல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நீச்சல் தெரியும்
விமானம் உடைந்து விழுந்ததால் 3 பேரும் தப்பி இருப்பார்கள். எனது மகனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் உயிருடன் இருப்பார். அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் இறைவனை வழிபட்டு வருகிறோம். உறுதியாக எனது மகன் வீட்டுக்கு வருவார் என்று சுரேஷ் கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவாகவே தனது மகனுக்கு சுபாஷ் என்று பெயர் வைத்ததாக கூறியுள்ளார் விமானியின் தந்தை சுரேஷ். என் மகனும் நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் இணைந்ததற்காக மகிழ்ச்சியடைந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலமாக மாயமான சுபாஷை எண்ணி கவலையில் ஆழ்ந்திருந்த பெற்றோர், குடும்பத்தினருக்கு சுபாஷின் நண்பர்கள்தான் ஆறுதலாக இருக்கின்றனர். மகனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்று நம்பிக்கையோடு கூறும் பெற்றோருக்காகவாவது சுபாஷ் திரும்ப வரவேண்டும் என்பது நண்பர்களின் பிரார்த்தனையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications