Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சியில் கலக்குறாரே டிராயிங் மாஸ்டர்.. விஜயகாந்த் விரலாலேயே.. "நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஓவிய ஆசிரியர் வரைந்த, ஓவியம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும், திரண்டு வந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா?

நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவாலாரன்ஸ் சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக விளங்கி வருகிறார். அந்தவகையில், மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை, பல வருட காலமாகவே விடாமல் செய்து வருகிறார்..

raghava lawrence vijayakanth

பிரத்யேகமான பாதுகாப்பகம் அமைத்துள்ளார்.. சேவையே கடவுள் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம் உதவிகள் தேவைப்படுவோருக்கு செய்து வருகிறார்..

அறக்கட்டளை:
இந்த அறக்கட்டளையின் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர் 10 ஊர்களுக்கு ராகவாலாரன்ஸ் வழங்கியிருக்கிறார். அந்தந்த ஊர்களுக்கு வழங்கப்படும் இந்த டிராக்டர்களை, அந்தந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்..

சமீபத்தில் ஸ்வேதா என்ற மாணவி, ஒரு வீடியோ வெளியிட்டு ராகவா லாரன்ஸ் உடைய "மாற்றம் உங்கள் சேவை" வழியாக தனக்கும் உதவும்படி கேட்டிருந்தார்.. அந்த​ வீடியோவை பார்த்த​ லாரன்ஸ், உடனடியாக ஸ்வேதாவை நேரில் சந்தித்து பேசினார்.

பள்ளி மாணவி: ஸ்வேதாவுக்கு கால் ஊனமுற்றிருப்பதால், அதை குணப்படுத்த தேவையான வேலைகளையும், அதற்கான செலவையும் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார்... அது மட்டுமல்லாமல் அந்த மாணவி பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக, ஒரு வண்டியையும் பரிசாக வழங்கினார்... இந்தவீடியோவை ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் ராகவா லாரன்ஸ் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவரும் ராகவா லாரன்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இந்த வாழ்த்தை ஓவியமாகவே வரைந்து ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார்..


விஜயகாந்த்: "நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்" என்ற விஜயகாந்த் பாடலை குறிப்பிட்டு, அந்த பாட்டு வரிகளுக்கேற்றபடியே, பொட்டு வைத்து, ராகவா லாரன்ஸ் ஓவியத்தை அச்சு அசலாக வரைந்திருக்கிறார்..

இதில் சிறப்பு என்னவென்றால், பிரஷ் எதுவுமே பயன்படுத்தாமல், தன்னுடைய விரலிலேயே குங்குமத்தை தொட்டு "பொட்டு" வைத்து, ராகவா லாரன்ஸ் உருவத்தை வரைந்துள்ளார்.. அதுவும் வெறும் 5 நிமிடங்களில் வரைந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, விஜயகாந்த் உருவம்பொறித்த மோதிரத்தை அணிந்து கொண்டு, அந்த மோதிர விரலாலேயே "பொட்டு" வைத்து ஓவியம் வரைந்துள்ளார் செல்வம்.. இந்த ஓவியத்துக்கு தீபாராதனையும் காட்டினார்.

குங்குமம்: குங்குமத்தை தொட்டு தொட்டு பொட்டு வைத்து, லாரன்ஸ் உருவத்தை செல்வம் வரைய துவங்கியதுமே, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து ஆசிரியர் செல்வத்தை வாழ்த்த துவங்கிவிட்டார்கள். இந்த பொட்டு ஓவியம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+