தொடரும் கடல் சீற்றம்... வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல் தொடர்ந்து சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கடினவயல், தென்னடார் ஆகிய இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.

கடல் சீற்றம் மற்றும் சூறை காற்று காரணமாக இன்று பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்கள் படகுகளை சூறை காற்றில் இருந்து பாதுகாக்க கரையில் கயிறு கட்டி வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அசைவ பிரியர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஒரு சில மீனவர்கள் தான் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு குறைந்த அளவு மீன்களே கிடைத்து வருகின்றன. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தற்போது தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் மேலும் தடைகள் வரும் என மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications