ஷூவை கழற்றிய ராகுல்... தன் செருப்பைக் கொடுத்து உதவிய 'ஏர்போர்ட்' நாராயணசாமி
புதுச்சேரி: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ராகுல்காந்தி வெறும் காலுடன் சேற்றில் நடந்ததைப் பார்த்து முன்னால் மத்திய அமைச்சர் நாரயணசாமி தனது செருப்பை கொடுத்து உதவியுள்ளார். சேற்றில் ராகுல்காந்தி நிற்பது போலவும்,அவரது அருகில் செருப்பை கையில் பிடித்துக்கொண்டு நாராயணசாமி நிற்பது போலவும் புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் தன்னுடைய செருப்பைத்தான் ராகுல்காந்தி கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார் மாஜி மத்திய அமைச்சர் நாராயணசாமி.

வடகிழக்குப் பருவமழைக்கு புதுவையும் தப்பவில்லை. சென்னை, கடலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் போல புதுவையும் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளானது. தமிழகம், புதுவையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று தனி விமானம் மூலம் வருகை தந்தார்
புதுச்சேரிக்கு விமானத்தில் வந்த ராகுல்காந்தி காரில் சென்று மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். அவர் அரியாங்குப்பம் சண்முகாபுரம் பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கால்களில் ஷூ அணிந்திருந்தார். அந்த ஷூ சேற்றில் வழுக்கியது. இதனால் அவர் மேற்கொண்டு நடக்க சிரமப்பட்டார்.
தனது ஷூவை கழற்றிவிட்டு நடக்க வெறும் காலில் நடக்க முயன்றார். அப்போது அவருடன் வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி தான் அணிந்திருந்த செருப்பினை ராகுல்காந்தி அணிந்து கொள்ள வழங்கினார். அதன்பின் ராகுல்காந்தி நாராயணசாமியின் செருப்பை அணிந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது, இது குறித்து விளக்கம் அளித்துள்ள நாராயணசாமி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த ராகுல்காந்தி எனது மாநிலத்தின் விருந்தினாராக வந்தார். அவர் சிரமப்படக்கூடாது என்றுதான் எனது செருப்பை அளித்தேன். இதனை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ராகுல்காந்தி நேரடியாக களத்தில் இறங்கி பார்வையிட்டார். பிரதமர் மோடியைப் போல ஹெலிகாப்டரில் பார்வையிடவில்லை என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications