மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா நீடிக்குமா?: ஜி.கே.வாசன் சஸ்பென்ஸ் !
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக ஜூன் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. இதை விரும்பாத மூத்த தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகினர்.

எஸ்.ஆர்.பி. அதிமுகவில் இணைந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். பீட்டர் திரும்பவும் காங்கிரஸுக்கே போய் விட்டார். தேர்தலில் தமாகா மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. எங்குமே டெபாசிட் கிடைக்கவில்லை. 26 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியே அதற்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சதவீத வாக்குகளைக் கூட அதனால் வாங்க முடியவில்லை.
இந்த நிலையில் தமாகா மாவட்டத் தலைவர்களின் கூட்டம் மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை மாவட்டச் செயலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் தமாகாவைப் பலப்படுத்த 100 சதவீத பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
சட்டசபைத் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். வரும் காலகட்டங்களில் வெற்றி பெறுவதற்கான நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காக நிர்வாகிகள் தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறேன்.
ஜூன் 11-ஆம் தேதி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் நீடிக்கலாமா, விலகலாமா என்பது தொடர்பாக செயற்குழுவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க.,-தா.மா.கா-மக்கள் நலக் கூட்டணி தொடரும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications