தென்மேற்குப் பருவமழை முடிந்தது… வடகிழக்குப் பருவமழை அடுத்தவாரம் தொடங்க வாய்ப்பு!
சென்னை: வடகிழக்குப் பருவமழை அடுத்தவாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நடப்பாண்டு சென்னையில் 45 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த வாரத்துடன் தென்மேற்கு பருவமழை முடிவடையும் காலமாகும்.
தமிழ்நாட்டுக்கு அதிக பயன் அளிக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்தவாரம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினசரி மழை
தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யலாம். இதன் மூலம் தினமும் 1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றும் மழை
சென்னையில் பகல்நேரங்களில் வெயிலடித்தாலும் இரவில் பரவலாக மழை பெய்கிறது. மயிலாப்பூர், தியாகராயநகர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட சில இடங்களில் நேற்று மாலை லேசாக மழை பெய்துள்ளது.

கூடுதல் மழை
சென்னையில் ஜூன் 1-ந் தேதி முதல் இதுவரை 598 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 413 மி.மீ மழை பெய்யும். இந்த வருடம் 45 சதவீதம் அதிக மழை பெய்து இருக்கிறது.சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் அடுத்த சில தினங்களில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாடுமுழுவதும் மழை
இதனிடையே இந்த ஆண்டு நாடுமுழுவதும் பருவமழை நல்லமுறையில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 1 முதல் செப்டம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் 39 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல விளைச்சல்
கேரளா, கர்நாடகா, குஜராத்,மகாராஷ்டிரா, கிழக்கு ராஜஸ்தான், ஓடிஸா போன்ற மாநிலங்களில் பருவமழை சரியான காலத்தில் தொடங்கி கூடுதலாகவே பெய்துள்ளதால் பயிர்களின் விளைச்சலும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்குப் பருவமழை
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இன்னும் சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், சென்னைக்கு மீண்டும் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சி தயாரா?
இரண்டுநாள் மழை பெய்தாலே சென்னை நகர சாலைகளும், பள்ளமான பகுதிகளும் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. வடகிழக்குப் பருவமழையால் தினசரி மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை சமாளிக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications