இடம் மாறுகிறது... இரு உயிர்கள் பறி போக காரணமாக இருந்த பட்டினப்பாக்கம் டாஸ்மாக் மதுக் கடை!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களாக நடந்து வந்த மக்கள் போராட்டம் எதிரொலியாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
வேறு இடத்திற்குக் கொண்டு போய் அந்தக் கடையைத் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். சீனிவாசபுரத்தில் உள்ள இந்த மதுக் கடையில் மது அருந்தி விட்டுத்தான் கருணாகரன் என்ற கொள்ளையன், ஆசிரியை நந்தினியின் பணம் அடங்கிய கைப்பையை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் ஆசிரியை நந்தினி தனது மொபெட்டில் அவரைத் துரத்தவே, கருணாகரன், நந்தினியின் மொபட்டை காலால் உதைத்து விட்டார். இதில் வண்டி தாறுமாறாக போய் விழுந்து நந்தினியும், சாகர் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கருணாகரனை மடக்கப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். கருணாகரன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி கடந்த 5 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மதுக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறி போராட்டம் நடந்து வந்தது. ஆனால் அரசுத் தரப்பில் கடையை மூடுவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தற்போது கடையை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். இந்தக் கடையை மூடி விடுமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதால், அத ஏற்று கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனறாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications