ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு- பெரியார் ஈவேராதான் காரணம்... எச். ராஜா ‘உளறல்’
ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன; பெரியார், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு தீக்குளிப்பு சம்பவம் ஒரு சாட்சி என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மாண்டு போயினர்.
தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இந்த கந்து வட்டி கொடுமை தீக்குளிப்பு. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளதாவது:

பகுத்தறிவால் ஏற்பட்ட விளைவு
தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பகுத்தறிவு என கூறியே அடிப்படை அறிவையே மழுங்கடித்துவிட்டனர்.

ஆன்மீக நம்பிக்கை தேவை
ஆன்மீக நம்பிக்கை இருந்தால்தான் கஷ்டங்களை எதிர்கொள்கிற துணிச்சல் வரும். அதாவது இது ஆண்டவன் கொடுத்தது..நல்லது செய்வான் என்கிற நம்பிக்கை வேண்டும்.

நாத்திகத்தை விரட்டனும்
பெரியாரும் அவரது ஆதரவாளர்களும் நாட்டை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு சாட்சிதான் தீக்குளிப்பு சம்பவம். நாத்திகத்தை விரட்டி அடித்தால் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறாது.
தேசிய கட்சிகளில் இல்லை
திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது நிறைய பேர் தீக்குளித்தனர். ஆனால் தேசிய கட்சிகளில் தீக்குளிக்கும் நிகழ்வுகள் நடப்பது இல்லை.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications