ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு- பெரியார் ஈவேராதான் காரணம்... எச். ராஜா ‘உளறல்’
ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன; பெரியார், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு தீக்குளிப்பு சம்பவம் ஒரு சாட்சி என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மாண்டு போயினர்.
தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இந்த கந்து வட்டி கொடுமை தீக்குளிப்பு. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளதாவது:

பகுத்தறிவால் ஏற்பட்ட விளைவு
தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பகுத்தறிவு என கூறியே அடிப்படை அறிவையே மழுங்கடித்துவிட்டனர்.

ஆன்மீக நம்பிக்கை தேவை
ஆன்மீக நம்பிக்கை இருந்தால்தான் கஷ்டங்களை எதிர்கொள்கிற துணிச்சல் வரும். அதாவது இது ஆண்டவன் கொடுத்தது..நல்லது செய்வான் என்கிற நம்பிக்கை வேண்டும்.

நாத்திகத்தை விரட்டனும்
பெரியாரும் அவரது ஆதரவாளர்களும் நாட்டை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு சாட்சிதான் தீக்குளிப்பு சம்பவம். நாத்திகத்தை விரட்டி அடித்தால் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறாது.
தேசிய கட்சிகளில் இல்லை
திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது நிறைய பேர் தீக்குளித்தனர். ஆனால் தேசிய கட்சிகளில் தீக்குளிக்கும் நிகழ்வுகள் நடப்பது இல்லை.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications