தலித் நல நிதியை வேறு திட்டங்களுக்கு எப்படி மாற்றலாம்.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய ஆதிதிராவிடர்களுக்கான நல நிதியை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆதிதிராவிடர்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் 20 சதவீத தொகையை, தமிழக அரசு வேறு துறைகளுக்கு பிரித்து அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பாஜகவின் எஸ்சி மோர்ச்சா பிரிவின் மாநில பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ‘மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் மொத்த ஒதுக்கீட்டில் 20 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு பயன்படுத்த அனுப்பி வைக்கிறது. ஆனால், மாநில ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் அந்த தொகையை மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு பிரித்து அனுப்பியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எனக்கு இது தெரியவந்தது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் புகார் கடிதம் அனுப்பினேன். அதன்பேரில் இதுபற்றி விசாரிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த விசாரணையில் இந்த 20 சதவீதம் தொகை ஆதிதிராவிடர் நலனுக்கு பயன்படுத்தப்படாமல் மற்ற துறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த விவரங்களை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மற்ற துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகையை வசூலித்து ஆதிதிராவிடர் நலனுக்கு பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications