குமரி மாவட்டத்தில் வெளுத்துக் கட்டும் கன மழை.. பெரும் தவிப்பில் மக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கழ மழையால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்று காலை முதல் பெய்த கன மழை விடாமல் இரவிலும் தொடர்ந்து அடை மழையாக பெய்ததால் நாகர்கோவில் ஸ்தம்பித்தது. ஒரே நாளில் அங்கு 12 செமீ மழை பெய்தது.

அடை மழை காரணமாக, போலீஸ் நிலைய ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி, ஈச்சன்விளை, புன்னையடி, புவியூர், தென்தாமரைகுளம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி, மகாதானபுரம் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
அகஸ்தீஸ்வரம் கீழ சாலை, நடு சாலை, அம்மன் கோவில் சாலை மற்றும் சமாதான புரம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இன்று காலையிலும் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பால்குளம், சாமித்தோப்பு பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தென்னந்தோப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குளச்சல், குருந்தன்கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூரை உலுக்கிய மழை நின்று போய் விட்ட நிலையில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications