கத்திப்பாரா மேம்பாலத்துக்கே பூட்டு போட்ட இளைஞர்கள்! முடங்கியது சென்னை போக்குவரத்து!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் நடைபெறும போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டம் குறித்து வாய்திறக்கவில்லை. விவசாயிகளை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரதான் முயற்சிக்கிறார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கவில்லை.

மேம்பாலத்துக்கு பூட்டு
விவசாயிகளின் போராட்டத்தை இதுவரை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், சென்னை கத்திப்பாரா பாலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலதுக்கு பூட்டுப்போட்டு போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்
இந்த திடீர் போராட்டத்தால் கத்திப்பாரா பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன.

முக்கிய சாலைகள் முடங்கின
கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியாத சூழல் ஏற்பட்டது. கிண்டி, விமானநிலையம் மற்றும் வடபழனி செல்லும் சாலைகள் அனைத்தும் முடங்கியது.

வெளியே செல்ல முடியாத நிலை
சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியாத நிலை உருவானது. இதனால் விமான நிலையம் செல்வோர் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது
சென்னையின் முக்கிய ஜங்கஷனான கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தப்போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து பூட்டை பெரும் பாடுபட்டு உடைத்த போலீசார் வாகனங்கள் செல்ல வழியை ஏற்படுத்தி தந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications