ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானதை எதிர்த்த வழக்கு- ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்

18 வருடங்களாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டு தண்டனை பெற்றதால் தானாகவே அவரது பதவி பறிபோய் விட்டது. இதையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ஜெயலலிதா தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாறாக ஆளும் அ.தி.மு.க. சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் அடுத்த முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதனடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த முதலமைச்சர் தேர்வு நடைமுறைகள் சட்டப்படி நடைபெறவில்லை.
ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனதும், இந்திய தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக கவர்னர், முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும். அதன்பின்னர், புதிய முதலமைச்சரை நியமித்து இருக்க வேண்டும். எனவே, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவி விலகலில் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப் படவில்லை. அதனால், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், இந்த வழக்கை மனுதாரர் தொடர்வதற்கு அவருக்கு அடிப்படை உரிமை இல்லை என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications