அரசியல் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்
அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சென்னை: தன்னால் வெறும் கலைஞனாக மட்டுமே இருக்க முடியாது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். மேலும் சமீபத்திய அரசியல் நிலைமை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
தமிழன் என்று கூறுவதை விட திராவிடன் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று கூறிய கமல், திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது கருத்து என்று தெரிவித்தார்.

முதல்தகுதி
எளிமையான தலைவர்கள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

சட்டங்கள் மாறவேண்டும்
காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல், மக்களின் தேவைகளுக்கிணங்க சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்.

அரசியல் ஹீரோக்கள்
மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி , பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை என்று கூறினார் .

அரசியல் மாறுபடும்
கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும் . மக்களுக்கு தேவையான அரசியலே தேவை . அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன என்றார். திமுக சாதாரணமாக தொடங்கி ஆட்சியமைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது என்றும் கமல் தெரிவித்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
தனக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் என யாருடனும் பரிட்சையமில்லை என்று கூறிய கமல் தான் யாருக்காக ஆதரவாகவும் குரல் கொடுக்கவில்லை என்றார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறிய அவர், சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல தான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்வதாக கூறினார். அதற்காக தன்னை அரசியலுக்கு வரச்சொல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

திராவிடம் அழியாது
திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவருடைய கருத்து என்று தெரிவித்த கமல், திராவிட இயக்கங்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்று கூறினார். திராவிடத்திற்கு ஆதரவாக தான் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications