போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்... சசிகலா புஷ்பா எம்.பி. பகீர் பேட்டி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்; என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார்; எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனக் கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால் உடனடியாக அதிமுகவில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
Sasikala Pushpa, sacked AIADMK MP: I was not allowed to go home, kept in Poes Garden like a dog. I am under threat pic.twitter.com/gpoSAuS6d1
— ANI (@ANI_news) August 1, 2016
இதன் பின்னர் டெல்லி செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டி:
சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன். வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.
என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
என்னால் இப்போது சுதந்திரமாக செயல்பட முடியும். என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாத காலமாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன்.
எனக்காக காங்கிரஸ், திமுக, பாஜகவினர் குரல் கொடுத்தார்கள்.. அவர்களுக்கு நன்றி.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
அப்போது, ஜெயலலிதா உங்களை அடித்தாரா? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சசிகலா புஷ்பா எந்த பதிலும் தரவில்லை.
மேலும் வேறு யாராவது உங்களை அடித்தார்களா? என்ற கேள்விக்கும் சசிகலா புஷ்பா பதில் தரவில்லை.
ராஜ்யசபா எம்பிக்கு இந்த கதியா?
ஒரு ராஜ்யசபா எம்.பி. தம்மை கட்சித் தலைவர் அடித்தார்; ராஜினாமா செய்ய மிரட்டினார் என்பதற்கு மேலே நாயைப் போல அடைத்துவைத்தார்கள் என பகீர் குற்றம்சாட்டியிருக்கிறார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபா எம்.பி.க்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி ஏதேனும் விசாரணை நடத்த வாய்ப்பிருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications