ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும்: மாஃபா பாண்டியராஜன்!
நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தினகரன் கொடுத்த கெடு முடிவடைய உள்ள நிலையில் ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக கூறிவிட்டது ஓபிஎஸ் அணி.
ஆனால் நிபந்தனைகளை ஏற்பது குறித்து இதுவரை வாய்திறக்காத ஈபிஎஸ் அணி இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கூறிவருகிறது.

வெளிப்படையாக கூற வேண்டும்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தானாக பேச்சுவார்த்தை தொடங்கும்
ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி போல் ஆட்சி நடைபெறவில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

பதவிக்காக ஆசைப்படவில்லை
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் பதவிக்காக ஆசைப்படவில்லை என்றும் அவர் கூறினார். மறைமுகமாக பேசுவது அணிகள் இணைப்புக்கு வழிவகுக்காது என்றும் மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

விரைவில் பேச்சுவார்த்தை
மாஃபா பாண்டியராஜனின் இந்த பேச்சு ஈபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என அழைப்பதை உள்ளது. இதனால் ஓபிஎஸ் அணியிடம் ஈபிஎஸ் அணியினர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications