ஊதிய உயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள்: ஓபிஎஸ் பொளேர்!
ஊதிய ஊயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊதிய ஊயர்வு வேண்டாம் என்றால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 8ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரின் போது பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே காராசார விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மசோதா நிறைவேற்றம்
முன்னதாக எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடும் வாக்குவாதம்
எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பான விவாதத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

கடுமையான நிதி நெருக்கடி
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா? என சபாநாயகரிடம் கடிதம் வழங்குவோம் என்றார். திமுக எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்றார்.
தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஊதியத்தை தரத் தயார்
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறமாட்டோம் என்றும் அவர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தேவைப்பட்டால் எங்கள் ஊதியத்தை தரத் தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொகுப்பு வீட்டில் எம்எல்ஏ
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்றார். மேலும் அனைத்து எம்எல்ஏக்களும் வசதியாக இல்லை என்ற அவர் ஆற்காடு அதிமுக எம்எல்ஏ சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார் என்று கூறினார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு..
கடந்த 6 மாதமாக சம்பள உயர்வு பற்றி பேசாத ஸ்டாலின், தற்போது பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதல்வர் பொது நிவாரண நிதியில் ஒப்படைத்து விடுங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாமே காப்பாற்றாவிட்டால்?
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நமது எம்எல்ஏக்ளை நாமே காப்பாற்றாவிட்டால், வேறு யார் காப்பாற்றுவது என கேள்வி எழுப்பினார்.

கையெழுத்து போட்டுள்ளோம்
இதையடுத்து பேசிய ஸ்டாலின் உயர்த்தப்பட்ட ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்றார். மேலும் சம்பள உயர்வு தேவையில்லை என கையெழுத்து போட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் அனல்பறந்தது
துணை முதல்வர் ஓபிஎஸும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மாறி மாறி பேசியதால் சட்டசபையில் அனல்பறந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications