டி.ஜி.பி ராஜேந்திரன் பதவிநீட்டிப்பில் தவறு இல்லை... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு!
தமிழக காவல் துறை இயக்குனராக டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதில் தவறு இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
மதுரை : குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு அளித்ததில் தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் செயலாற்றி வந்தார். கடந்த மாத இறுதியில் அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசு ராஜேந்திரனின் பணியை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்தது.

இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கதிசேரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருப்பது சரியல்ல என்று மனுதாரர் கோரியிருந்தார். எனவே ராஜேந்திரனின் பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரகூ டிஜிபி ராஜேந்திரன் மீது குறிப்பிட்ட எந்தப் புகாரும் இல்லை என்று கூறியிருந்தது. மேலும் பணி நியமனம் குறித்த அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கிய மதுரை நீதிமன்றம் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதில் தவறு இல்லை. ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், 2 வாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications