கேரளாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை சேலத்தில் அறிமுகம் செய்த ஜெ.
சேலம்: அதிமுக வேட்பாளர்கள் 46 பேரை ஆதரித்து சேலத்தில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கேரளா மாநிலத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் 46 வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.

கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருவனந்தபுரம் - டாக்டர் பி.ஜீ.ரமேஷ், சித்தூர் - என். மயில் சாமி, மலம்புழா - சி.பி. ஸ்ரீதரன், நெம்மாரா - கே.மேனகா, தேவிகுளம் (தனி) - ஆர்.எம். தனலட்சுமி, உடும்பன் சோழா - சோமன், பீர்மேடு - சி.அப்துல் காதர் ஆகிய 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.
நலத்திட்டங்களை பட்டியலிட்டு, திமுக ஆட்சி காலத்தை திட்டிய பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் ஜெயலலிதா. இந்த தொலைக்காட்சி வாயிலாக பிரச்சாரத்தை பார்த்தவர்கள், கேரளா மாநிலத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுகிறது. ஆனால் கேரளாவில் 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால் இரட்டைக்கு இலைக்கு வாக்கு கேட்கவில்லை ஜெயலலிதா.
சேலத்தில் இன்றைக்கு வெயில் 103 டிகிரி கொளுத்தியது. ஆனாலும் 4 மணிக்கு பேச வந்த ஜெயலலிதாவைப் பார்க்க காலை 11 மணிமுதலே காத்திருந்தனர் தொண்டர்கள். பச்சை கலரில் தொப்பி கொடுத்திருந்தாலும் கொளுத்திய வெயிலுக்கு கருகித்தான் போனார்கள் தொண்டர்கள். இதில் முதியவர் ஒருவரின் உயிர் பறிபோனதுதான் சோகம்.
சென்னை, காஞ்சியில் மாலை 6 மணிக்கு பிரச்சாரம் செய்தது போல உள் மாவட்டங்களிலும் ஜெயலலிதா மாலை நேரங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications