சட்டசபையில் பிப்ரவரி 12ல் ஜெ. படம் திறப்பு... மோடி கைவிரித்ததால் சபாநாயகரே திறந்து வைக்கிறார்!
சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் பிப்ரவரி 12ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் பிப்ரவரி 12ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வந்து ஜெ படத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சபாநாயகர் தனபாலே ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் புகைப்பட திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அவரே புகைப்படத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பிரதமர் ஜெயலலிதா புகைப்படத் திறந்து வைப்பதற்கு கிரீன் சிக்னல் கிடைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 12ல் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சபாநாயர் தனபால் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டசபை வளாகத்தில் மறைந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், படம் இடம்பெற்ற நிலையில் தற்போது அந்த வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்படமும் திறந்து வைக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியிடம் தேதி கேட்டு காத்திருந்தது போதும் என்ற முடிவுக்கு அரசு வந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை ஜெயலலிதா படம் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் என்று திடுதிப்பென அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications