4 ஆண்டு சிறை.. 10 ஆண்டு தடை... என்னவாகும் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம்?
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விதான் தமிழக அரசியலில் முதன்மையான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலராக மட்டுமின்றி அக்கட்சியின் ஒரே தலைவராக இருப்பவர் ஜெயலலிதாதான். தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் தண்டனைக் காலத்துக்குப் பின்னர் 6 ஆண்டுகாலம் அதாவது மொத்தம் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

அதிமுகவை காப்பாற்ற முடியுமா?
தற்போது 66 வயதாகும் ஜெயலலிதா இன்னும் 2 பொதுத்தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. தேர்தலில் போட்டியிடாமலேயே ஜெயலலிதாவால் அதிமுகவை காப்பாற்ற முடியுமா? என்பது தவிர்க்க முடியாத கேள்வி.

எதிர்காலமே அவ்ளோதான்
குன்காவின் தீர்ப்பால் ஜெயலலிதான் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது... இனி அரசியலில் அவருக்கான இடம் எதுவுமே இல்லை.. எல்லாமே முடிந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.

விஸ்வரூபத்துடன் வருவார்
அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கான தண்டனை நிச்சயம் ரத்தாகும். அவர் பார்க்காத வழக்குகள் எதுவும் இல்லை.. ஏற்கெனவே 2001ம் ஆண்டு அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்ட போதும் இப்படித்தான் சொன்னார்கள்.. ஆனால் மீண்டும் விஸ்வரூபத்துடன் எழுந்து வருவார் ஜெயலலிதா என்பது அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை.

ஜாமீன் மட்டும் கிடைக்கட்டும்..
மேலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலே போதும்... தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகவே திகழ்வார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

முதல்வர் பதவி கனவுதான்
என்னதான் ஜாமீனில் ஜெயலலிதா வந்துவிட்டாலும் இனிமேல் அவர் முதல்வர் பதவியை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.. ஏனெனில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகச் சரியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பது சட்டவாளர்களின் கருத்து.
இப்படி ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் பல "கேள்விகளை"க் கொண்டதாகவே இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications