காயத்ரியின் 'சேரி' பேச்சுக்கு கமல் வக்காலத்து! கஞ்சா கருப்புக்கு மட்டும் ஒரு நியாயமா?
சேரி பிகேவியர் என காயத்ரி பேசியதை தான் சொல்லிக் கொடுக்கவில்லை என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: சேரி பிகேவியர் என காயத்ரி பேசியதை தான் சொல்லிக்கொடுக்கவில்லை என கமல் தெரிவித்துள்ளார். இதனால் தான் தெரிவித்த கருத்துக்கு காயத்ரி மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு ஏழரையை கூட்டிவருகிறது. கொஞ்சமும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லால் செல்லும் இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க வன்மமும் வக்கிரமும் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் காயத்ரி ரகுராம், ஓவியாவை பார்த்து சேரி பிகேவியர் என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் புகார்கள் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்த கமல், காயத்ரி பேசியதை தான் எழுதி தரவில்லை. அதனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

சென்சார் செய்ய முடியாது
மேலும் சேரி என்று சொன்னதை சென்சார் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். திரைப்படத்திற்கே சென்சார் தேவையில்லை என்கிறார் கமல்.

அதுக்கு மட்டும் பீப்
ஆனால் கஞ்சா கருப்பு சில தினங்கள் முன்பு பரணியை கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க பாய்ந்தார். அப்போது கஞ்சா கறுப்பு பேசிய கெட்ட வார்த்தையை விஜய் டிவி பீப் சவுண்ட் போட்டு ஒலிபரப்பியது.

ஏன் பீப் போடவில்லை
ஆனால் சேரியை மட்டும் பீப் செய்யவில்லை. காயத்ரி சொந்த வார்த்தை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் பீப் போடவில்லை. அப்போது வேண்டுமென்றெ அந்த வார்த்தை விடப்பட்டதா? சாதிய ரீதியில் ஒருவரை திட்டி பேசுவது தவறாகாதா? அதை எப்படி விஜய் டிவி அனுமதிக்கலாம்.

அவ்வளவு கேவலமானதா?
சேரி மக்களின் பிகேவியர் என்ன அவ்வளவு கேவலமானதா? எந்த அடிப்படையில் காயத்ரி அப்படி சொல்லலாம்? இதுகுறித்து கேட்டால் சாதியை ஒழித்து விட்டீர்களா என வக்காலத்து வாங்குகிறார் கமல்.

வக்காலத்து வாங்குகிறார் கமல்
இது எந்த விதத்தில் நியாயம்? காயத்ரி பேசியதில் தவறில்லை என்பதை போல் சப்பைக்கட்டு கட்டுகிறார் கமல். கமல் ஸ்க்ரிப்ட் கொடுக்கவில்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். ஆனால் பேசிய காயத்ரியாவது இதற்கு மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications