காயத்ரியின் 'சேரி' பேச்சுக்கு கமல் வக்காலத்து! கஞ்சா கருப்புக்கு மட்டும் ஒரு நியாயமா?
சேரி பிகேவியர் என காயத்ரி பேசியதை தான் சொல்லிக் கொடுக்கவில்லை என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: சேரி பிகேவியர் என காயத்ரி பேசியதை தான் சொல்லிக்கொடுக்கவில்லை என கமல் தெரிவித்துள்ளார். இதனால் தான் தெரிவித்த கருத்துக்கு காயத்ரி மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு ஏழரையை கூட்டிவருகிறது. கொஞ்சமும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லால் செல்லும் இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க வன்மமும் வக்கிரமும் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் காயத்ரி ரகுராம், ஓவியாவை பார்த்து சேரி பிகேவியர் என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் புகார்கள் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்த கமல், காயத்ரி பேசியதை தான் எழுதி தரவில்லை. அதனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

சென்சார் செய்ய முடியாது
மேலும் சேரி என்று சொன்னதை சென்சார் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். திரைப்படத்திற்கே சென்சார் தேவையில்லை என்கிறார் கமல்.

அதுக்கு மட்டும் பீப்
ஆனால் கஞ்சா கருப்பு சில தினங்கள் முன்பு பரணியை கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க பாய்ந்தார். அப்போது கஞ்சா கறுப்பு பேசிய கெட்ட வார்த்தையை விஜய் டிவி பீப் சவுண்ட் போட்டு ஒலிபரப்பியது.

ஏன் பீப் போடவில்லை
ஆனால் சேரியை மட்டும் பீப் செய்யவில்லை. காயத்ரி சொந்த வார்த்தை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் பீப் போடவில்லை. அப்போது வேண்டுமென்றெ அந்த வார்த்தை விடப்பட்டதா? சாதிய ரீதியில் ஒருவரை திட்டி பேசுவது தவறாகாதா? அதை எப்படி விஜய் டிவி அனுமதிக்கலாம்.

அவ்வளவு கேவலமானதா?
சேரி மக்களின் பிகேவியர் என்ன அவ்வளவு கேவலமானதா? எந்த அடிப்படையில் காயத்ரி அப்படி சொல்லலாம்? இதுகுறித்து கேட்டால் சாதியை ஒழித்து விட்டீர்களா என வக்காலத்து வாங்குகிறார் கமல்.

வக்காலத்து வாங்குகிறார் கமல்
இது எந்த விதத்தில் நியாயம்? காயத்ரி பேசியதில் தவறில்லை என்பதை போல் சப்பைக்கட்டு கட்டுகிறார் கமல். கமல் ஸ்க்ரிப்ட் கொடுக்கவில்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். ஆனால் பேசிய காயத்ரியாவது இதற்கு மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications