பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி கமல் புரிந்து கொள்ள வேண்டும்- நிர்மலா சீதாராமன்
மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை: மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி கமல்ஹாசன் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் அமல் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களாகவே கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை வெளி கொண்டு வரவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
எனவே கணக்கில் வராத பணத்தை வெளிகொண்டு வரவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
பொருளாதார வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் முயற்சியாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதி. அதை தான் மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறினார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பணமதிப்பு நீக்கத்தை நடிகர் கமல்ஹாசன் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்கம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டார் கமல். இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பின்னர் பணமதிப்பு நீக்கத்தை தான் ஆதரித்தது தவறு என்று குறிப்பிட்டார். டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன் என்று கூறியிருந்தார் கமல். அவருக்கு பதில் தரும் தருவிதமாகவே நிர்மலா சீதாராமன் இன்று தனது பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பணமதிப்பு நீக்கத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications