கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு… மக்கள் சாலை மறியல்… போலீசார் குவிப்பு.. பதற்றம் அதிகரிப்பு
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாயில் இருந்து எண்ணை கசிவு திடீரென ஏற்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ளது கதிராமங்கலம். இங்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி ஆறு ஓடிய இந்த கிராமத்தில், நெல் விளைந்து செழிப்போடு காணப்பட்ட கிராமம் இன்றைக்கு போரட்டகளமாகியுள்ளது. ஒரு மாத காலத்துக்கும் மேலாக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓஎன்ஜிசி விளக்கம்
ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம் புதியத் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அதனை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
எண்ணெய் கசிவு
இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், குழாயில் இருந்து எண்ணெய் கசியும் இடங்களில் புகை வருவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கதிராமங்கலத்தை சேர்ந்த மக்கள் கோரியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை மறியல்
இதுகுறித்து, எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தங்களது போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசைக் கண்டித்து பொதுமக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன், மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

போலீசார் குவிப்பு
இதனால், கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications