கீழக்கரையில் வெடிகுண்டு மிரட்டல் புரளியால் 12 பள்ளிகளுக்கு விடுமுறை
கீழக்கரை: கீழக்கரையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரே நாளில் 12 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பின்னர், அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
கீழக்கரை நகராட்சித்தலைவி ராவியத்துல் கதரியாவின் வீட்டு முன் நேற்று காலை 7:00 மணியளவில் ஒரு கடிதம் கிடந்தது. அதில், "வணக்கம், நான் இந்த கீழக்கரையில் ஏதாவது 5 ஸ்கூல்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த இடத்திற்கு நீ செல்லாதே.
ஏனென்றால், நீ ரொம்ப நல்லவ. உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கு. நான் வைத்த வெடிகுண்டை எடுத்திடு. இல்லைனா அடுத்த 11:18 மணிக்கு ஏதாவது ஒரு ஸ்கூலில் பிளாஸ்ட் ஆகிடும். அங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கிறவங்க இறந்துடுவாங்க" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நகராட்சிதலைவி ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனனிடம் புகார் செய்தார். இத்தகவல் காலை 11:30 மணிக்கு 12 பள்ளித்தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்றனர். இதனால் கீழக்கரையே பெரும் பரபரப்புக்குள்ளானது.
டி.எஸ்.பி சிவசங்கர் உத்தரவின்பேரில், எஸ்.ஐ கோட்டைச்சாமி தலைமையில் துப்பறியும் மோப்ப நாய்கள் ஜான்ஸி, ராம்போ ஆகியவற்றுடன் வெடிகுண்டு நிபுணர் குழுவினர், 12 பள்ளிகளிலும் வகுப்பறைகளில் சோதனை செய்தனர்.
நீண்ட நேர சோதனைக்குப்பின், கடிதத்தில் கூறப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. கடிதம் எழுதியவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
-
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications