கொடநாடு பங்களாவில் ஃபைல்கள் வெளியே போனதா...புதிதாக உள்ளே வந்ததா? நடிகர் ரஞ்சித் பகீர்: வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்த ஃபைல்கள் கொள்ளை போனதா அல்லது யாரேனும் புதிதாக உள்ளே வைத்தார்களா என அரசு விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ஊட்டி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்தார்களா அல்லது எதையவது உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்களா என அரசு விசாரிக்க வேண்டும் என ஒபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ஊட்டியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நடிகர் ரஞ்சித், அந்த அணியினர் நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தினகரன் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதற்காக அவர் கட்சியைச் சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை.மீண்டும் அவர் சிறைக்குப் போவார். வெளியே வருவார். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

அவருக்கு அவர்மீதுள்ள வழக்குகளையும் சொந்த பிரச்சனைகளையும் சமாளிக்கவே நேரம் போதாத போது அவரால் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தமுடியாது. அடிப்படையில் அவர் அதிமுக உறுப்பினரே கிடையாது. அவர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர். மக்கள் அவரை ஒரு கொள்ளைக் கூட்டத்தவராகத்தான் பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் சாதாரணமான விஷயம் கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அவருடைய உடைமைகளுக்கே பாதுகாப்பில்லை என்பது எத்தனை பெரிய ஆபத்தான விஷயம்?
ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து எதையும் கொள்ளையடித்துப் போனார்களா அல்லது அவருடைய பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் யாரேனும் எதையாவது வைத்துவிட்டுப் போனார்களா என்பதை இந்த அரசு விசாரிக்க வேண்டும் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications