கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்.. பதற வைக்கும் லேட்டஸ்ட் வீடியோ!
திருச்சி: கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் உள்ள பழைய பாலம் உடையும் அபாய நிலையில் காணப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும்முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 67,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இன்றைய காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆறு எப்படி உள்ளது. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் 18-ஆவது தூண் சரிந்துள்ளது. இதனால் இந்த பாலமே உடையும் நிலையில் காணப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோவை நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து ஜெய்கார்த்திக் நாகரத்தினம் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications