எங்களின் நிபந்தனையை ஏற்றால் ஈபிஎஸ் அணிக்கு நல்லது.. கே.பி.முனுசாமி அதிரடி

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் நிபந்தனைகளை ஏற்றால் முதல்வர் எடப்பாடி அணிக்கு நல்லது நடக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓ.பிஎஸ் அணி கட்சியை பலப்படுத்துவதற்காக மே 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பணத்தின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் செயல்ழுடும் விதம் குறித்தும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.

K.P.Munusamy says that OPS faction demands will favour EPS camp too in future

அதிமுகவின் இரு அணிகளும் இணைமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இரு அணிகளும் தங்கள் அணியின் பலத்தை நிரூபிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பயணத்திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார்.

இருஅணி இணைப்பு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமையை தாங்கள் செய்து வருவதாகக் கூறினார். மேலும் தங்கள் தரப்பில் முன் வைக்கப்படும் 2 கோரிக்கைகளான சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது அதிமுகவில் உள்ள அனைவரும் விரும்பும் கோரிக்கைகள் என்றார்.

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்,தங்களது நிபந்தனைகளை ஏற்றால் எதிர்காலத்தில் ஈபிஎஸ் அணிக்கும் நல்லது நடக்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+