கூடங்குளத்தில் மின் உற்பத்தி 900 மெகாவாட் ஆக அதிகரிப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி 900 மெகா வாட்டை எட்டியுள்ளது. அதை மேலும் அதிகரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் உலையில் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்கே சின்கா, அணுசக்தி கழக தலைவர் புரோகித் தலைமையில் முதல் அணு அணு பிளவுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி 160 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டது. பின் டிசம்பர் 26ம் தேதி 425 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது 1035 மணி நேரத்தில் 35 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அணு மின் நிலையம் தெரிவித்தது. இதை தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் அணு உலையில் 900 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய கடந்த வாரம் அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து காலை நிலவரப்படி 850 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் படிப்படியாக உயர்ந்து 900 மெகா வாட்டை எட்டியுள்ளது. விரைவில் இது 1000 மெகா வாட்டாக உயர்த்தி உற்பத்தி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அணு சக்தி ஓழுங்கு முறை வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் முதல் அணு உலையில் முழு அளவில் மின் உற்பத்தி என்ற நிலை எட்டப்படும் என்று அணு சக்தி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications