சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை #ChennaiRains
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கன மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் சென்னையில் மழை பெய்யத் தொடங்கியது. இப்போது வரை சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, இராயபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, தாம்பரம், தரமணி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,தி.நகர், கோடம்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், சோழவரம், செங்குன்றம், மாதவரம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
போக்குவரத்து முடக்கம்
சென்னை முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. சென்னை சாலைகளில் வெள்ளம் போல தேங்கி இருக்கும் மழை நீரினால் போக்குவரத்து முழுதாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல மாநகரப் பேருந்துகள் சாலைகளிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மின்சார இரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட அதிகமான பயணிகள் இரயில்களில் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் இரண்டு அடி வரை தேங்கி உள்ளது. 189 இடங்கள் தாழ்வான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை நான்காவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து 3 மாவட்ட கலெக்டர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது சென்னை மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னையில் விடாமல் கன மழை பெய்வதால் மக்கள் பெரும் பீதி
— Oneindia Tamil (@thatsTamil) November 2, 2017
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு
#ChennaiRains pic.twitter.com/EXKEgak7uj
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications