தேர்தல் எதிரொலி.. சென்னையில் 4 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தலையொட்டி சென்னையில் 14, 15, 16, 19ம் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகள் மட்டுமின்றி, பார்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் மேற்கண்ட தினங்களில் மதுபானம் விற்க கூடாது என்பது கலெக்டர் உத்தரவாகும்.

உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்து வைத்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
தேர்தலையொட்டி, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி வாக்குப்பதிவும், 19ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications