டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகுதான் மதுபான சேல்ஸ் பல மடங்கு கூடியுள்ளது.. இந்த விந்தை ஏன் தெரியுமா?
ஒரு நபருக்கு இத்தனை பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்தினால் தட்டுப்பாடு தீரும் என்கிறார்கள் சில குடிகாரர்கள்.
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது விற்பனை படுவேகமாக ஏறி வருகிறது.
மதுபான கடைகளை மூடினால் மது விற்பனை குறையத்தானே செய்ய வேண்டும், எப்படி கூடுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை.
பெரும்பாலான மதுக்கடைகள் மூடுவிழா கண்டுவிட்டதால் ஆங்காங்கே திறந்திருக்கும் ஒருசில கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரே டாஸ்மாக்
உதாரணத்திற்கு நெல்லை மாவட்டத்தில் தென்காசி என்பது பெரிய நகராட்சி பகுதி. அங்கு இருந்த 7 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு விட்டன. போலவே, சுற்றுலாத் தலமான குற்றலாலத்தில் இருந்த 2 கடைகளில் ஒரு கடை மூடப்பட்டு விட்டது. இதனால் எஞ்சிய ஒரு கடையில்தான் தென்காசியிலுள்ள மொத்த குடிகாரர்களும் குவிந்துள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளில் குடிக்கு அடிமையானவர்களும் இந்த கடையில் மொய்க்கிறார்கள்.

தேனி நிலை
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் தற்போது சுத்தமாக காலி. திறந்திருக்கும் ஒருசில கடைகளில் குடிகாரர்கள் முண்டியடிக்கிறார்கள்.

நிற்க முடியல
தேவைப்படும்போதெல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று குடித்து வந்த குடிகாரர்களுக்கு இப்போது கால்கடுக்க நீண்ட நேரம் கியூவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இப்படி விற்பனை ஜோராக நடப்பதால் கடைகளில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் வாங்கிச் சென்றதை குடித்து காலி செய்யும் வரை அவர்கள் மீண்டும் டாஸ்மாக் பக்கம் வரமாட்டார்கள் என்பதால் இன்னும் சில நாட்களில் மது விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

கள்ளச்சந்தை
ஒரு நபருக்கு இத்தனை பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்தினால் தட்டுப்பாடு தீரும் என்கிறார்கள் சில குடிகாரர்கள். அதேநேரம், இந்த நிலையை சாதகமாக்கி ஒரு சிலர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று கள்ள மார்க்கெட் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு பிளாக்கில் மதுபானம் விற்றதாக பெரம்பலூரை அடுத்த வெங்கடேசபுரத்தில் 4 பேர் போலீசில் சிக்கினர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications