அடுத்தடுத்து 2 திறன் குறைந்த குண்டுகள் வெடித்தன - ரயில்வே பொது மேலாளர்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவஹாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது வெடித்த குண்டு திறன் குறைந்த குண்டு என்று தெரிய வந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புக்குப் பின்னர் குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குவஹாத்தி -பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 9வது பிளாட்பாரத்திற்கு வந்தபோது குண்டு வெடித்துள்ளது.
அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்துள்ளன. அவை சக்தி குறைந்த குண்டுகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் வெடித்தது என்ன மாதிரியான குண்டு என்பது முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என்றார் மிஸ்ரா.
ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என பொதுமேலாளர் கூறியுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.25000, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5000 ரயில்வேதுறை சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம், இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். இன்னும் ஒருமணி நேரத்தில் ரயில்சேவை மீண்டும் தொடங்கும் என்றும் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications