வெள்ளையர்களுக்கு எதிராக ஓங்கி ஒலித்த கம்பீர தமிழ்க் குரல்.. மா. நன்னன்!
வெள்ளையனே வெளியேறு என்று கம்பீரமாக குரல் கொடுத்து போராடியவர் மறைந்த தமிழறிஞர் மா. நன்னன் ஆவார்.
Recommended Video

சென்னை: இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குரல் கொடுத்துப் போராடியவர் தமிழறிஞர் மா. நன்னன்.
விருத்தாசலத்தை சேர்ந்த மா. நன்னன் சென்னையில் வசித்து வந்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

அதுமட்டுமல்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் தீவிரமாக கலந்து கொண்டவர். இந்தியா முழுவதும் இந்தியை அலுவல் மொழியாக்கும் முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துப் போராடியவர். 1937-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மா. நன்னனும் கலந்து கொண்டார்.
திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மா. நன்னன், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், தமிழ் இயக்கத்திலும் கலந்து கொண்டுள்ளார். கடைசி மூச்சுவரை தமிழ் மொழியையே சுவாசித்தார். இதுவரை 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications